Search This Blog

Sunday, May 3, 2020

திருமண வாழ்த்து


அன்பெனும் நதியினில்-மேலும் கீழும்அலை அடிக்க...
லாவகமாய் அனுசரித்து...
இருவருமே துடுப்பாகி...
வாழ்க்கையெனும் படகினிலே மைல்கள் பல தாண்டி விட்ட உதாரணத் தம்பதியரென
ஊர் போற்ற... உறவும் போற்ற...
எங்கள் வழிகாட்டியாய் வந்த நீங்கள்...
ஒன்றுக்குள் ஒன்றாகி...
உறவுக்கு விளக்கமாகி...
அன்பென்னும் பந்தத்தில்- அரும்பெரும் சுடராகி...
பண்பென்னும் பகுப்பிலே - பலமான விருட்சமாகி...
வாழ்வின் இன்ப வளைவுகளை- வசந்தத்தின் வாசலாக்கி...
உலகமுள்ளவரை இன்புற்று வாழ...
அகம் மகிழ்ந்து அன்பாலே...
வாழ்த்துகிறோம்...

Fazeen Rifaya Sameem 

Saturday, May 2, 2020

மனிதன் மீண்டு வருவான்


மீண்டு வருவான் மனிதன்
பூமியில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு எத்தனையோ இலட்சக்கணக்கான இயற்கை பேரிடர்கள், கொடிய நோய் தொற்றுக்கள் மற்றும் சமூக அழிவுகளை சந்தித்திருக்கிறான். சந்தித்தது மட்டுமன்றி அவற்றை சிறப்பாக வெற்றிகொண்டு மீண்டு வந்து இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
என்றைக்கு மனிதன் கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினானோ அன்றைக்கே இயற்கையை தன்வயபடுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டான்...
இச்சிறப்பான மனிதன் பூமியில் தோன்றிய நாள் முதல் இன்று வரை, அவன் சந்தித்த நோய் ஏராளம்...
கொள்ளை நோய், மலேரியா, கொலரா, அம்மைநோய், யானைக்கால் நோய், இளம்பிள்ளைவாதம் இன்னும் எத்தனையோ... இக்கொடிய நோய்களால் பல லட்சக்கணக்கான மக்கள் இறந்து போயினும் அவற்றுக்கான தடுப்பு மருந்துகளை கண்டு பிடித்தான்... அதில் வெற்றியும் கண்டான்...
இன்றைய இளைய தலைமுறையினர் மேற்கூறிய நோய்களின் பெயரை கூறினால், "அப்படியென்றால் என்ன?! " என்று கேட்கும் அளவுக்கு அவற்றை அழித்து ஒழித்து விட்டான்...
இந்நோய்களை இல்லாதொழிப்பதற்காக 'பென்சிலின்' கண்டு பிடித்தான்; முக்கூட்டு வக்சீன் கண்டு பிடித்தான் ; அம்மைப்பால் கட்டினான்... அதுமட்டுமின்றி நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சம காலத்தில் தோன்றிய SARS virus(2002-2004), MERS virus(2012-2015),Ebola virus (2013-2016), Swine Flu -H1N1(2009-2010) இன்னும் எலிக்காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்ற எல்லாவற்றுக்கும் மருந்து கண்டு பிடித்து மீண்டு வந்தான்... இவ்வைரசுகளை இல்லாதொழித்தும் விட்டான்...
அது போலவே இன்றைக்கு கொடிய தாக்கத்தை ஏற்படுத்திகொண்டிருக்கும் Corona Virus க்கும்(COVID-19) மருந்தை கண்டு பிடித்து மனித குலத்தை நிம்மதியாக வாழச்செய்ய மருத்துவ ஆய்வாளர்கள், உயிரியல் விஞ்ஞானிகள் ஓய்வின்றி உழைத்துகொண்டு இருக்கிறார்கள்... அதே போல் பொது மக்களாகிய நாமும் நமது கடமைகளை சரிவர செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
சமூக இடைவெளி பேணுதல், தேவை இல்லாத சந்தர்ப்பங்களில் வெளியில் சுற்றுவதை தவிர்த்தல், முக கவசம் இன்றி பொது இடங்களிற்கு செல்வதை தவிர்த்தல் போன்றவற்றை சரிவர கடைப்பிடிக்க தவறும் பட்சத்தில் நாமும் இந்நோய் தொற்றுக்குட்பட்டு இறந்து போக நேரிடும்.. "தக்கன பிழைக்கும்.. தாகதன அழியும்... "
America, Italy, Spain, France மற்றும் England போன்ற முன்னேற்றம் அடைந்த நாடுகள் இம்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற உரிய வேளையில் பின்பற்ற தவறியமையால் இன்று ஆயிரக்கணக்கான பெறுமதிமிக்க மனித உயிர்களை இழந்து பரிதவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது...
" எப்படி தாமதிக்க பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனானதாக கருதப்படுகிறதோ அதே போல தாமதித்து வழங்கப்படும் மருத்துவமும் உயிரிழப்பிற்கு சமம்"
பொதுவாக Virus ஏனைய நுண்ணங்கிகளைவிட சிறப்பம்சம் கொண்டவை. இவை உயிரற்ற ஊடகங்களில் உயிரற்றதாகவும் உயிர்ப்புள்ள ஊடகங்களில் உயிர்ப்புடனும் தொழிற்படகூடியவை. மேலும் காலத்துக்கு காலம் தன்னை உருமாற்றம் (modification) செய்யும் வல்லமை கொண்டவை. எப்படி மனிதன் உட்பட ஏனைய பிற உயிரினங்களும் பூமியில் வாழ தன்னை விட முன்னேற்றகரமான எச்சங்களை விட்டு செல்ல எத்தனிக்கிறதோ அதே போல் வைரஸ்களும் இருப்பதை விட இன்னும் வீரியமான எச்சங்களை விட்டு செல்ல எத்தனிக்கும்.
America வின் California மாகாணத்தில் இருந்து பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு தொற்றிய Swine Flu(H1N1) virus ஆனது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்ற பல நாட்கள் எடுத்தன. மேலும் இன்னொரு மனிதருக்கு தொற்றிக்கொள்ளும் போது அதன் வீரியமும் குறைந்து காணப்பட்டது. ஆகையால் மனிதன் அதிலிருந்து தப்பித்து கொள்ளவும், அதற்க்கான மருந்து கண்டு பிடிக்கவும் இலகுவாக இருந்ததது.. இதனால் உயிர் சேதம் பெருமளவில் குறைக்க கூடியதாக இருந்தது.
அதேபோல் SARS, MERS Virusகளும் மிக மிக கொடுமையானவையாக இருந்தபோதிலும் தொற்றிய மனிதர்களிடம் அதிகளவு நோய்க்கான அறிகுறிகளை காட்டின இதன்மூலம் அவற்றில் இருந்து மனிதர்கள் இலகுவாக தப்பித்து கொள்ளவும், விரைவாக மருந்து கண்டு பிடிக்கவும் முடிந்தது.
ஆனால் Corona Virus அப்படியல்ல.. மேற்கூறிய வைரஸ்களை விட 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது. மேலும் தொற்றுக்குள்ளான நபரில் இருந்து அடுத்த நபருக்கு மின்னல் வேகத்தில் பரவுவதோடு 14 நாட்களுக்கு உடலில் எந்தவித அறிகுறிகளையும் காட்டாது உயிரை குடிக்கவல்லது.
தொற்று ஏற்பட்ட ஒருவரிடமிருந்து சுமார் 400 பேருக்கு மிக விரைவாக பரவக்கூடிய திறன் கொண்டது. 80% பேருக்கு நோய் தொற்றின் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. மருத்துவ பரிசோதனை செய்தாலொழிய நோய் தாக்கத்தை கண்டு பிடிக்க முடியாது.
நோய் தொற்றுக்குள்ளான மனிதன் தும்மினாலோ, இருமினாலோ வெளியேறும் virus இலகுவில் அழிந்து விடுவதில்லை. நீண்ட நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும். இதனாலேயே அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதோடு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதிலும் கால தாமதம் ஏற்படுகிறது.
இருப்பினும் மனிதன் இதற்கான மருந்தை விரைவில் கண்டு பிடித்து மீண்டு வருவான்... மேலும் இனிவரும் காலங்களில் உயிர் வாழும் மனிதனுக்கு குடிநீர் இல்லாது போகும் என்றபோது கடல் நீரை குடிநீராக்கினான்.. மனித இனம் குடியிருக்க நிலமில்லாது போகும் என்ற போது Taiwan, Vietnam, Cambodia போன்ற நாடுகளில் நீர் நிலைகளை குடியிருப்புகளாக. மாற்றினான்... பாலைவன பிரதேசங்களாகிய Dubai, Kuwait, Qatar மற்றும் Israel போன்ற நாடுகளில் கடல் நீரை சுத்திகரிப்பு செய்து பயிர் சாகுபடி செய்து அதிலும் வெற்றி கண்டான்... ஒரு காலத்தில் இப்பூமியில் மனிதயினம் வாழ தட்பவெப்ப சூழல் இல்லாது போனாலும் வான்வெளியில் வாழப்பழகிக்கொள்வான்... இவ்வாறான ஆற்றல் படைத்த மனிதனுக்கு இக்கொரோனாவை அளிப்பது என்பது பெரும் சிரமமல்ல.... மனிதன் Corona வை அழித்து மீண்டு வருவான்...
அப்துல் சமது சமீம்
முன்னால் வங்கி முகாமையாளர்
(Bank of Ceylon)

Dark Side of Trending Penguin 🐧

 Dark Side of Trending Penguin 🐧  இன்றைக்கு சமூக வலைத்தளம் முழுவதும் பேச்சு பொருளாய் மாறி இருக்கு ஒரு பென்குயின்…70km தூரம் எதையும் யோசிக்க...