நேற்று என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த நாள்... ஏதோ ஒன்றை சாதித்து விட்டதாய் ஓர் உணர்வு... அடி நெஞ்சில் ஓடி கொண்டிருந்த நெருப்பு ஆற்றின் மேல் ஆலங்கட்டி மழை பெய்தது போல் ஜிவ்வென்று இருந்தது. என் கெட்ட பழக்கங்களில் ஒன்று எழுந்த உடன் Facebook scroll செய்வது அப்படியாக விடிந்த நேற்றைய காலை என் கண்ணில் பட்ட அந்த செய்தியே என் பூரிப்புக்கு காரணம்... எனக்கும் அச்செய்திக்கும் எந்த விதமான நேரடி தொடர்பும் இல்லாத போதும் ஏதோ ஒன்றை அடைந்து விட்டதாய் ஏற்பட்ட உணர்ச்சி என் உடல் முழுவதும் பரவி ஓர் புதிய தைரியத்தையும் உற்சாகத்தையும் குடுத்தது.
ஆம்... ஆபத்தில் உதவி கோரிய அப்பாவி பெண்ணை உதவி செய்வதாய் பாசாங்கு செய்து துகில் உரித்து... காம இச்சைக்காய் அவளை பிழிந்து சக்கை ஆக்கியதோடு நில்லாமல் அவளை உயிருடன் எரிந்து அதில் இன்பம் கண்ட நான்கு மிருகங்களை.. மன்னிக்கவும் நான் மிருகங்களை கேவல படுத்த விரும்பவில்லை... அந்த நான்கு ஈன பிறவிகளும் அந்த அபலை எரித்து கொலை செய்யப்பட்ட அதே பாலத்தின் அடியில் வைத்து என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தரமான சம்பவம் தெலுங்கானா மாநில போலீசாரால் நிகழ்த்தப்பட்டது... மகிழ்ச்சி... மிக்க மகிழ்ச்சி...
இதற்கிடையில் திடீர் வெள்ளை றெக்கை முளைத்த சமாதான புறாக்களாய் சிலர் இது மனிதாபிமானம் அற்ற செயல்... சட்டத்தை கையில் எடுத்தது தவறு... இது அநீதி... போலீஸ் அராஜகம் என்று எல்லாம் கொக்கரிக்க இன்னும் சில ஜேம்ஸ் பாண்ட்கள் இவர்கள் உண்மையான culprits இல்லை.. வெறும் கண்துடைப்பு என துப்பறியும் சிறுகதை... நாவல்... எழுத ஆரம்பித்ததை பார்த்த பின் இப்பதிவை இடலாம் என தீர்மானித்தேன்.
பதிவுக்குள் போகும் முன் நான் நியாயம் இல்லமால் பெண் உரிமை சம உரிமை என கூக்குரல் இடும் fake feminist இல்லை என்பதை பதிவு seiya விரும்புகிறேன்.
சரி coming back to the point... நீதி தேவதைகளுக்கு எல்லாம் சில கேள்விகள்...
1. சட்டத்தின் கையில் ஒப்படைத்தால் சிறுவன் என சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பீர்களா? இல்லை பாவம் அறியாமல் தவறு செய்தான் நன்னடத்தை உள்ளவன் என்று 2 வருடங்களில் பொது மன்னிப்பு கொடுத்து TATA காட்டி வழி அனுப்புவீர்களா? இல்லை இல்லை நாங்கள் சட்ட படி மரண தண்டனை வாங்கி கொடுப்போம் என்று அவர்களுக்கு 3 வேளையும் சாப்பாடும் போட்டு ஜெயிலில் வாடட்டும் என்பீர்களா?
மூன்றே வயதான குழந்தையை கற்பழித்து கொன்றவனுக்கு நீங்கள் மரண தண்டனை வாங்கி கொடுத்த லட்சணத்தைத்தான் பார்த்தோமே... அப்டியே பாத்தாலும் இதுவும் ஒரு வகையான மரண தண்டனை தான்...
இவர்கள் உண்மையான culprits இல்லை வெறும் கண்துடைப்பு என்று செல்பவர்களுக்கு..
2. உங்கள் ஜேம்ஸ் பாண்ட் மூளை நன்றாக வேலை செய்கிறது வாழ்த்துக்கள்... விரைவாக உங்கள் துப்பறியும் பணியை ஆரம்பித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுங்கள் அப்போது தான் இந்த 4 அப்பாவிகளையும் சுட்ட போலீஸ் அராஜகத்திற்கு தண்டனை பெற்று குடுக்கலாம்.
இது ஒரு அநீதியான செயல் என்று வருத்தப்படும் இளகிய மனசுக்கார்களுக்கு...
3. அந்த பெண்ணுக்கு நடத்த அநீதிக்கு... ஓ sorry sorry 🙏 இந்த பொண்ணுங்க இறுக்கமான உடை அணிந்து சென்றால் பாவம் பசங்க சபல படத்தானே செய்வார்கள்... நாம இந்த 4 பேர்க்கும் நடந்த அநீதி பற்றி மட்டும் பேசுவோம்... (ஒரு photo இணைகின்றேன் பார்த்து விட்டு எது அநீதி என்று முடிவு செய்து கொள்ளுங்கள்)
பணக்கார வீட்டு பசங்க செய்தால் இப்படி செய்து இருக்க மாட்டார்கள் என்று ஆதங்க படுபவர்க்கு...
4. எங்கோ ஒரு புள்ளியில் நானும் உங்களுடன் ஒத்து போகிறேன் ஆனால் முழுவதும் ஆக அல்ல... இதை நான் ஒரு விடிவு காலத்தின் ஆரம்பமாய் பார்கிறேன்... எதற்கும் ஓர் ஆரம்பம் வேண்டாமா? இனி பெண்ணை தடவுவதற்கு... தொடுவதற்கு... முன் ஒரு முறைக்கு 100 முறை யோசிப்பார்கள் இல்லையா?? இதுவே பெரிய வெற்றி தானே...
..................................
அந்த பெண் எப்படியெல்லாம் கெஞ்சி மன்றாடி இருப்பாள்... ? யாரவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என ஏங்கி தவித்து இருப்பாளோ...? இவை இயன்ற வரை பெண் உறுப்பை சிதைத்து தன் இச்சைகளை எச்சிலாய் உமிழ்ந்து விட்டு போகும் குறி கொண்ட மிருகங்கள் என ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் வெறுத்து இருப்பாளோ... ? இல்லை... பெற்ற தகப்பனாவது தன் உயிர் காக்க மாட்டானா என்று தவித்து இருப்பாளோ.... ? இல்லை... துகில் உரிக்கையில் எந்த கண்ணனும் தடுக்கவில்லே என கடவுளை வசைபாடி இருப்பாளோ.... ? பாவம்... எல்லாமும் முடிந்து உடலும் மனமும் சிதைந்த பின்னும் உயிர் பிழைப்போம் என நம்பி தொலைந்து ஏமாறி இருப்பாளோ... ? இல்லை பெண்களை வெறும் சதையாகவும் போகப்பொருளாகவும் பார்க்கும் ஆண்களுக்கு முன்னால் சதை பிண்டமாய் வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து இருப்பாளோ.... ?
அவள் உயிர் பிரியும் தருவாயில் அவள் மன ஓட்டம் என்னவாக இருந்திருக்கும்....? ஒரு வேளை காப்பற்ற துப்பு இல்லாத இந்த கேடுகெட்ட சமூகத்தில் வாழ்வதை விட சாவதே சாகடிக்க படுவதே மேல் என்று கண்ணை மூடி இருப்பாளா...?
இந்த பன்றி கூட்டத்தின் பசிக்கு இரையாகி போன பேதைக்கு எம்மால் செய்ய கூடிய மிக சிறிய உதவி இந்த தண்டனையை வரவேற்பது தான்... இது மேலும் அமுலில் இருக்கவும் வேண்டும்... எம் கையறு நிலைக்கு தண்டனையாய் குறைந்த பட்சம் இதை விமர்சனம் செய்யாமல் இருப்போம்..
நன்றி...
Fazeen Rifaya Sameem
பாகுபலி style இல் சொன்னால் பெண்களை தொட்டால் வெட்ட வேண்டியது கைகளை அல்ல தலையை....
No comments:
Post a Comment