Search This Blog

Saturday, February 29, 2020

பெண்களை மிரட்டும் மார்பகப் புற்றுநோய்



பெண்களை மிரட்டும் மார்பகப் புற்றுநோய்

பெண்களின் மார்பகம் என்பது ஆண்களுக்கு என்றுமே சுவாரஸ்யமானதாகவும், இச்சைக்குரியதாகவும் இருந்துவருகிறது.
தாய்ப்பாலில் தொடங்கி முடி நரைத்த பின்னும்கூட, பெண்களின் மார்பகம் சார்ந்த ஆர்வமும், அதன் மேலுள்ள இச்சையும், அநேகமான ஆண்களுக்கு என்றும் குறைவதே இல்லை. ஆனால், பெண்களின் மார்பகம் பெரும்பாலும் பெண்களுக்கு ஒரு சுமையாகவே இருந்து வருகிறது.
மார்பகப் புற்றுநோய்(Breast cancer) என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். நாளங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு நாள புற்றுநோய் (டக்டல் கார்சினோமாஸ்) என்று பெயர். பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 2வது இடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆகட்டும், வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவிகள் ஆகட்டும், பெரும்பாலும் தங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலும் நோய் முற்றிய நிலையில் தான் அவர்கள் சிகிச்சைக்காகவே செல்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களை பெரிதும் தாக்கும் நோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய்.
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய் தான். மார்பக புற்றுநோய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அதன் ஆரம்பகால அறிகுறிகள் பற்றி சரியாகத் தெரிந்து கொண்டால், ஆரம்பத்திலேயே அதற்குரிய சிகிச்சைகளைப் பெற்று, எளிதில் குணமடைய முடியும். அதனால் தான் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயுடன் போராடுபவர்களை நினைவு கூறும் வகையில் பிங்க் நிற ரிப்பன் அணியப்படுகிறது.
அறிகுறிகள்
1. முக்கியமானது மார்பில் தோன்றும் வீக்கங்களும் கட்டிகளுமாகும். வலி இருக்கிறதோ இல்லையோ எத்தகைய மாற்றங்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவையே.
2. மார்புக் கச்சையின் அளவும் ஆரோக்கியமும் சாதாரண அவதானத்தில் அல்லது கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது மார்பக அளவுகளில் மாற்றம் தென்பட்டால் அசட்டை செய்ய வேண்டாம். சிலருக்கு இயல்பிலேயே ஒரு மார்பு மற்றதைவிடப் பெரிதாக இருக்கும். இது பயப்பட வேண்டியதில்லை. ஆனால் அந்ந அளவுகளில் புதிய மாற்றம் ஏற்பட்டால் கவனத்தில் எடுப்பது அவசியம்.
3. மார்பின் மேற்பரப்பில் ஏதாவது பள்ளம் அல்லது உட்குழிவு ஏற்பட்டால்.
மார்பக தோலின் மிருதுத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால், முக்கியமாக தோடம்பழத்தில் உள்ளது போல சிறு திட்டிகளும் பள்ளங்களுமாக மாற்றம் ஏற்பட்டால்.
முலைக்காம்பின் தோற்றத்தில் மாற்றம். அல்லது துருத்திக் கொண்டிருந்த முலைக்காம்பு உள்வாங்கப்பட்டால்.
4. முலைக் காம்பின் ஊடாகத் திரவம் வெளியேறினால்.
5. மார்பகத்தில் வலி ஏற்பட்டால். சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வழமையாக வலி ஏற்படுவதுண்டு. இதைத் தவிர ஏதாவது வலி ஏற்பட்டால் மருத்துவரைக் காண வேண்டும்.
பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைவது, 30 வயதுக்குப் பிறகு நடக்கும் திருமணங்கள், அதன் தொடர்ச்சியாக நடக்கும் குழந்தைப்பேறின்மைக்கான தொடர் ஹார்மோன் சிகிச்சைகள், டெஸ்ட் டியூப் பேபி போன்ற செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் மற்றும் தாமதமாகும் மெனோபாஸ் போன்றவைதான் மார்பகப் புற்றுநோய் வர முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் உறவினர்களில், குறிப்பாக தாய் அல்லது சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால் அந்தக் குடும்பத்துப் பெண்ணுக்கு இந்தப் புற்றுநோய் வர 10 சதவிகித வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. குரோமோசோம்களில்  BRCA 1&2 என்ற மரபணுக்கள் தோன்றுவதும்கூட மார்பகப் புற்றுநோயை உருவாக்கலாம்.
உடல்பருமன், உடற்பயிற்சியின்மை, புகை மற்றும் மதுப்பழக்கம், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், ஒவ்வாத மேற்கத்திய உணவுப் பழக்கவழக்கங்கள், அதிகக் கொழுப்பு உணவுகள் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களையும் காரணங்களாகக் கோடிட்டுக் காட்டுகிறது உலகப் புற்றுநோய் மையம். இவ்வளவு கொடுமையான நோயை வரும்முன் கண்டறிவது எப்படி என்று தெரியவேண்டியது அவசியம். நமக்கு நாமே பரிசோதித்துக் கொள்ளும் மார்பக சுயபரிசோதனை முறையும், மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யும் `மேம்மோகிராம் ' (Mammogram) முறை மூலமும்  மிகவும் எளிதாகப்  புற்றுநோயைக் கண்டறியலாம் என்கின்றனர் பெண்கள் நல மருத்துவர்கள்.
மார்பக புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மருத்துவமனைக்கு சென்று தான் செய்து கொள்ள வேண்டும் என்றில்லை. சில எளிய கருவிகளின் மூலம் பெண்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து மார்பக புற்றுநோய் குறித்து அறிந்துகொள்ள முடியும். மார்பக புற்றுநோய் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்வதன் மூலம் அதனை குணப்படுத்துவது இன்னும் எளிதாகும். மார்பக புற்றுநோயைக் கண்டறியும் 5 முக்கிய கருவிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
1. பிராஸ்டர் புரோ - மார்பக ஆய்வு முறை (Braster Pro-Breast Examination System) பிராஸ்டர் புரோ எனும் இந்த கருவி வைஃபை மூலம் இயங்கக் கூடியது. தன்னுள் இருக்கும் கேமரா மற்றும் சேமிப்புக் கருவிகளை கொண்டு சம்மந்தப்பட்ட இடத்தை மட்டும் புகைப்படம் எடுத்து சேமித்துக் கொள்ளும். 15 படங்கள் வரை சேமித்துக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. மொபைல் செயலி வழியாக செயல்படக்கூடிய இந்த கருவியால் தானாக இயங்கவோ அல்லது படத்தை டிரான்ஸ்பர் செய்யவோ முடியாது. இதற்காக பிராஸ்டர் கேர் எனும் பிரத்கேய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் எடுக்கும் புகைப்படங்களை கொண்டு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் இருக்கிறதா இல்லையா என்பதை இந்தக் கருவி கண்டறிந்து தெரிவிக்கும்.
2. பிரஸ்ட்லைட் (Breastlight ) பிரஸ்ட்லைட் எனும் இந்த கருவியை பெண்கள் தங்கள் வீட்டிலேயே பயன்படுத்தலாம். சுயபரிசோதனை செய்து கொள்ள உதவும் இந்த கருவி, ஒரு சிகப்பு நிற லைட்டின் மூலம் நோய் அறிகுறிகளைக் கண்டறிந்து சொல்லும். ஒருவேளை மார்பகத்தில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அந்த பகுதியில் மட்டும் சிவப்பு நிற வெளிச்சம் ஹைலைட் செய்து காட்டப்படும். இந்த ஒளியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
3. பிங்க் லூமினஸ் (Pink Luminous) பிங்க் லூமினஸ் எனும் இந்த கருவி, அதன் பயனாளர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வையும், மன அமைதியையும், நம்பிக்கையையும் தரக்கூடியது. பிங்க் லூமினஸ் கருவி பெண்களுக்கு ஒரு புதுமையான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கருவியாகும். இதன் மூலம் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தடியே சுயபரிசோனை செய்துகொள்ளலாம். இந்த கருவியின் மூலம் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் அசாதாரண விஷயங்கள் இருந்தால் அதனை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதனால் மிக விரைவாக அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள பிங்க் லூமினஸ் பெரிதும் உதவுகிறது. 
4. இன்ப்ராரெட் மார்பக புற்றுநோய் சுயபரிசோதனை மசாஜர் கருவி இது ஒரு புதுமையான நம் கைகளால் பயன்படுத்தக்கூடிய சுயபரிசோதனை மற்றும் சுய மசாஜ் கருவி. இதில் உள்ள சிகப்பு நிற பீம், மார்பகத்தில் உள்ள கட்டிகள், அசாதாரண சதைகள் ஆகியவற்றை கண்டறிய உதவும். மேலும், இதில் உள்ள மசாஜ் கருவி, மார்பக நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவும். இதில் இருந்து வெளியேறும் சிகப்பு ஒளி, மார்பகத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும். இதில் உள்ள 'கேர்' மோட் சிகப்பு ஒளி மற்றும் மசாஜ் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தி மார்பகம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும். ரேடியேஷன் மற்றும் பக்க விளைவுகள் இல்லாத, 100 சதவீதம் பாதுகாப்பான கருவியாக உலக அளவில் சிறந்த கருவி என போற்றப்படும் இக்கருவி மார்பகம் நோய்களை தடுக்கிறது.
5. ஐபிரஷ்ட் எக்சாம் ( iBreastExam ) மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான வசதி வாய்ப்புகள் குறைவாக உள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள கருவி தான் இந்த ஐபிரஷ்ட் எக்சாம். மார்பகத்தில் உள்ள சதைகளில் புற்று நோய் பாதிக்கப்பட்ட சதைகள் மற்றும் பாதிப்பில்லாத சதைகளை தனித்தனியே கண்டறிவதற்கு இந்த கருவி உதவும். இதனை மார்பகத்தின் மேல் பயன்படுத்தும் போது, இரண்டு சதைகளின் இடையே உள்ள வித்தியாசத்தை துல்லியமாக கண்டறியும்.
ஆக, பெண்களே... வெட்கம் என்று சில விடயங்களில் பாரா முகமாக இருந்து விடாமல் உங்கள் ஆரோக்கியத்திலும் சுக வாழ்விலும் சற்று கவனம் செலுத்த நேரம் ஒதுக்குங்கள்.

Thursday, February 27, 2020

வரதட்சணை

வனத்தில் உள்ள முட்கள் எல்லாம்
மனதில் ஆறாத ரணங்களாய் தைத்திடவே...
ஊமையாகிறாள் ஆகிறாள் முதிர்கன்னி....
பளபளக்கும் முத்தொன்று
சிற்பிக்குள் அடைபட்டு
அழும் கண்ணீரை அறிவார் உண்டோ....

வரதட்சணை அரக்கர்களே !
பெண்களின் வாழ்க்கையை
கடலுக்குள் முழ்கடிப்பது போல
வரதட்சனைகளுக்குள் முழ்கடிக்காதீர்....

பொருளென நினைத்தீரோ ?
பெண்ணின் மனதை...

திருமணச்சந்தையில்,
தன் மகளை விலையேற்ற,,,!
அடிமாட்டுச் சந்தையில்,
தான் வளர்த்த மாடுகளுக்கு
விலை வைத்துவிட்டார்...!!
தந்தை ஒருவர்....
ஒரு வயதிற்கு மேல் பெற்ற பெண்ணையே பிரச்சனை என்றார் இன்னொருவர்....
ஒரு பெண்ணை ஒப்பேற்றவே ஓடாய் தேய்ந்தேனே மற்றவர்களுக்கு... என உள்ளூர நொந்தார் வேறொருவர்.....
ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டிதான் என சும்மாவா சொன்னார்கள்....
ஒரு வேளை....
மகளைகளை பெற்றாலே குற்றமோ..... அதற்கான அபராதம்தான் இந்த வரதட்சனையோ....

பறவைகள்... ஏன் முதுகெலும்பு இல்லா புழுக்கள்கூட தனக்கான வீட்டை,பொருளை தானே தேடிக்கொள்கின்றன... நாம் இன்னும் மனிதன் என்று பீற்றிக்கொள்கிறோம்.... மனிதம் இல்லாமல்....

ஆணாணவன் தனக்கான வாழிடத்தை தானே அமைக்க கற்றுக்கொண்டானேயானால்- ஓர் ஆண் ஓர் வீட்டை மட்டுமே கட்ட கடமைப்பட்டவன் ஆகிறான்..... பல அப்பாவி அபலைகளின் கண்ணீர் துடைக்கும் கைகுட்டையாகிறான்.....

உடலுக்குள்
உயிர் ஒன்றே ஆணுக்கும்... பெண்ணிற்கும்...
உருவம் மாறி முதுமையெய்து உன் தாரத்தில் கோடி தாயை உணருவாய்.....
அப்போது......உன்-கண்கள் பனிக்கும்.....
உன்-கர்வம் கலையும் அந்த
கணங்களில்
காசு காற்றில்
கருகிய சாம்பலென உணர்ந்து வருந்தாதே மனிதா....

முதலில் மனிதம் பேசு
பின் காதல் பேசலாம்...

பெண்ணின் புத்திரனாய்
பெண்மை உணர்ந்திடு ...
நீயும் ஓர் நாள் தந்தையாவாய் மறந்துவிடாதே....

ஆணினமே.... உன்கோர் வேண்டுகோள்.....
வேரை விட்டு வெளியே வா
வரதட்சணைப் புற்றை உடைத்தெடு
முடிய கதவிற்கு பின்னே மூடாத கனவுகளுடன் இருக்கும் தேவதைகளை வாழ விடு-
உனக்காயினும் அவளிற்காயினும் முதுமை இருள் சூளுவதற்குள்...!


 பஸீன் றிபாயா சமீம்

சண்டைகாரி

சண்டைக்காரி
•••••••••••••

ஆம் நான் சண்டைக்காரி தான்
ஏனென்றால் முதுகுக்கு பின்னால்
பேசத் தெரியாமல் முகத்திற்கு முன்னால்
பேசுவதனால்.....

ஆம் நான் அகங்காரம் பிடித்தவள் தான்
ஏனென்றால் அதிகாரம் செய்பவரைக் கூட
ஆளுமை செய்வதனால்.....

ஆம் நான் கோபக்காரி தான்
ஏனென்றால் தவறுகளைக் கண்டு
சகித்துக் கொள்ளாமல் பொங்கி எழுவதனால்.....

ஆம் நான் வாயாடி தான்
ஏனென்றால் பேதம் பார்க்காமல்
வாதம் செய்வதனால்....

ஆம் நான் ராங்கிகாரி தான்
ஏனென்றால் கடினமான தருணங்களில் கூட
சோர்ந்து போகாமல்
எதிர்த்துப் போராடுவதனால்......

ஆம் நான் கண்டிப்புக்காரி தான்
ஏனென்றால் வரம்பு மீறுபவர்களிடம் - என்
வலிமையை காட்டுவதனால்......

ஆம் நான் முசுடு தான்
ஏனென்றால் முரண்டு பிடிப்பவர்களிடமே
முரட்டுதனமாக நடப்பதனால்....

ஆம் நான் பிடிவாதக்காரி தான்
வெறுப்பின் வலியையும்
சோதனையின் ரணங்களையும்
தனியாக தாங்கிக் கொள்வதனால்.....

ஆம் நான் திமிர்காரி தான்
ஏனென்றால் உண்மை சுடும்
என்பதை உணர்ந்து(த்தி) நடப்பதனால்.....

ஆளும் கட்சி யாரெனில்
எனக்கென்ன?
குறுகிக் கிடக்கும் குறில்
நானில்லை !


நேற்று என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த நாள்... ஏதோ ஒன்றை சாதித்து விட்டதாய் ஓர் உணர்வு... அடி நெஞ்சில் ஓடி கொண்டிருந்த நெருப்பு ஆற்றின் மேல் ஆலங்கட்டி மழை பெய்தது போல் ஜிவ்வென்று இருந்தது. என் கெட்ட பழக்கங்களில் ஒன்று எழுந்த உடன் Facebook scroll செய்வது அப்படியாக விடிந்த நேற்றைய காலை என் கண்ணில் பட்ட அந்த செய்தியே என் பூரிப்புக்கு காரணம்... எனக்கும் அச்செய்திக்கும் எந்த விதமான நேரடி தொடர்பும் இல்லாத போதும் ஏதோ ஒன்றை அடைந்து விட்டதாய் ஏற்பட்ட உணர்ச்சி என் உடல் முழுவதும் பரவி ஓர் புதிய தைரியத்தையும் உற்சாகத்தையும் குடுத்தது.

ஆம்... ஆபத்தில் உதவி கோரிய அப்பாவி பெண்ணை உதவி செய்வதாய் பாசாங்கு செய்து துகில் உரித்து... காம இச்சைக்காய் அவளை பிழிந்து சக்கை ஆக்கியதோடு நில்லாமல் அவளை உயிருடன் எரிந்து அதில் இன்பம் கண்ட நான்கு மிருகங்களை.. மன்னிக்கவும் நான் மிருகங்களை கேவல படுத்த விரும்பவில்லை... அந்த நான்கு ஈன பிறவிகளும் அந்த அபலை எரித்து கொலை செய்யப்பட்ட அதே பாலத்தின் அடியில் வைத்து என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தரமான சம்பவம் தெலுங்கானா மாநில போலீசாரால் நிகழ்த்தப்பட்டது... மகிழ்ச்சி... மிக்க மகிழ்ச்சி...

இதற்கிடையில் திடீர் வெள்ளை றெக்கை முளைத்த சமாதான புறாக்களாய் சிலர் இது மனிதாபிமானம் அற்ற செயல்... சட்டத்தை கையில் எடுத்தது தவறு... இது அநீதி... போலீஸ் அராஜகம் என்று எல்லாம் கொக்கரிக்க இன்னும் சில ஜேம்ஸ் பாண்ட்கள் இவர்கள் உண்மையான culprits இல்லை.. வெறும் கண்துடைப்பு என துப்பறியும் சிறுகதை... நாவல்... எழுத ஆரம்பித்ததை பார்த்த பின் இப்பதிவை இடலாம் என தீர்மானித்தேன்.

பதிவுக்குள் போகும் முன் நான் நியாயம் இல்லமால் பெண் உரிமை சம உரிமை என கூக்குரல் இடும் fake feminist இல்லை என்பதை பதிவு seiya விரும்புகிறேன்.

சரி coming back to the point... நீதி தேவதைகளுக்கு எல்லாம் சில கேள்விகள்...

1. சட்டத்தின் கையில் ஒப்படைத்தால் சிறுவன் என சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பீர்களா? இல்லை பாவம் அறியாமல் தவறு செய்தான் நன்னடத்தை உள்ளவன் என்று 2 வருடங்களில் பொது மன்னிப்பு கொடுத்து TATA காட்டி வழி அனுப்புவீர்களா? இல்லை இல்லை நாங்கள் சட்ட படி மரண தண்டனை வாங்கி கொடுப்போம் என்று அவர்களுக்கு 3 வேளையும் சாப்பாடும் போட்டு ஜெயிலில் வாடட்டும் என்பீர்களா?

மூன்றே வயதான குழந்தையை கற்பழித்து கொன்றவனுக்கு நீங்கள் மரண தண்டனை வாங்கி கொடுத்த லட்சணத்தைத்தான் பார்த்தோமே... அப்டியே பாத்தாலும் இதுவும் ஒரு வகையான மரண தண்டனை தான்...

இவர்கள் உண்மையான culprits இல்லை வெறும் கண்துடைப்பு என்று செல்பவர்களுக்கு..

2. உங்கள் ஜேம்ஸ் பாண்ட் மூளை நன்றாக வேலை செய்கிறது வாழ்த்துக்கள்... விரைவாக உங்கள் துப்பறியும் பணியை ஆரம்பித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுங்கள் அப்போது தான் இந்த 4 அப்பாவிகளையும் சுட்ட போலீஸ் அராஜகத்திற்கு தண்டனை பெற்று குடுக்கலாம்.

இது ஒரு அநீதியான செயல் என்று வருத்தப்படும் இளகிய மனசுக்கார்களுக்கு...

3. அந்த பெண்ணுக்கு நடத்த அநீதிக்கு... ஓ sorry sorry 🙏 இந்த பொண்ணுங்க இறுக்கமான உடை அணிந்து சென்றால் பாவம் பசங்க சபல படத்தானே செய்வார்கள்... நாம இந்த 4 பேர்க்கும் நடந்த அநீதி பற்றி மட்டும் பேசுவோம்... (ஒரு photo இணைகின்றேன் பார்த்து விட்டு எது அநீதி என்று முடிவு செய்து கொள்ளுங்கள்)

பணக்கார வீட்டு பசங்க செய்தால் இப்படி செய்து இருக்க மாட்டார்கள் என்று ஆதங்க படுபவர்க்கு...

4. எங்கோ ஒரு புள்ளியில் நானும் உங்களுடன் ஒத்து போகிறேன் ஆனால் முழுவதும் ஆக அல்ல... இதை நான் ஒரு விடிவு காலத்தின் ஆரம்பமாய் பார்கிறேன்... எதற்கும் ஓர் ஆரம்பம் வேண்டாமா? இனி பெண்ணை தடவுவதற்கு... தொடுவதற்கு... முன் ஒரு முறைக்கு 100 முறை யோசிப்பார்கள் இல்லையா?? இதுவே பெரிய வெற்றி தானே...

..................................

அந்த பெண் எப்படியெல்லாம் கெஞ்சி மன்றாடி இருப்பாள்... ? யாரவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என ஏங்கி தவித்து இருப்பாளோ...? இவை  இயன்ற வரை பெண் உறுப்பை சிதைத்து தன் இச்சைகளை எச்சிலாய் உமிழ்ந்து விட்டு போகும் குறி கொண்ட மிருகங்கள் என ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் வெறுத்து இருப்பாளோ... ? இல்லை... பெற்ற தகப்பனாவது தன் உயிர் காக்க மாட்டானா என்று தவித்து இருப்பாளோ.... ? இல்லை... துகில் உரிக்கையில் எந்த கண்ணனும் தடுக்கவில்லே என கடவுளை வசைபாடி இருப்பாளோ.... ? பாவம்... எல்லாமும் முடிந்து உடலும் மனமும் சிதைந்த பின்னும் உயிர் பிழைப்போம் என நம்பி தொலைந்து ஏமாறி இருப்பாளோ... ? இல்லை பெண்களை வெறும் சதையாகவும் போகப்பொருளாகவும் பார்க்கும் ஆண்களுக்கு முன்னால் சதை பிண்டமாய் வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து இருப்பாளோ.... ?
அவள் உயிர் பிரியும் தருவாயில் அவள் மன ஓட்டம் என்னவாக இருந்திருக்கும்....? ஒரு வேளை காப்பற்ற துப்பு இல்லாத இந்த கேடுகெட்ட சமூகத்தில் வாழ்வதை விட சாவதே சாகடிக்க படுவதே மேல் என்று கண்ணை மூடி இருப்பாளா...?

 இந்த பன்றி கூட்டத்தின் பசிக்கு இரையாகி போன பேதைக்கு எம்மால் செய்ய கூடிய மிக சிறிய உதவி இந்த தண்டனையை வரவேற்பது தான்... இது மேலும் அமுலில் இருக்கவும் வேண்டும்... எ‌ம் கையறு நிலைக்கு தண்டனையாய் குறைந்த பட்சம் இதை விமர்சனம் செய்யாமல் இருப்போம்..

நன்றி...

Fazeen Rifaya Sameem

பாகுபலி style இல் சொன்னால் பெண்களை தொட்டால் வெட்ட வேண்டியது கைகளை அல்ல தலையை....
#உறவுகள்_தொடர்கதையாக
#கண்டிப்பா_யூஸ்_ஆகும்...
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர். (பண்ணவும் நினைக்காதீர்)...

2. முடிந்தவரை அடுத்தவரின் Car மற்றும் Bike கடன் கேக்காதீர்...

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்...

4. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள்
 (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !)...
*அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள்.
*அவர்கள் போனைக் கேட்காதீர்கள்.
*அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

5. வயது, சம்பளம், விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்...

6. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள்...
(no one likes advices.)

7. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம்.
(unless they are your spouse / lover)

8.ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்...

9.குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்,
ஏன்? என்று காரணம் கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்...

10. ஒருவரின் வேலைb விபரங்களை துருவிதுருவி ஆராயாதீர்கள்..
அவர்கள் பொருளாதாரத்தில் உதவுபவர்களாக இல்லாத பட்சத்தில்...

Copied

மாதவிடாய்

மாதவிடாய்...

மாதவிடாய்... இன்னும் இதை நேரடியாக பேசத் தயங்கும்.. ஏன் பேசவே கூடாத பேசவே முடியாத சில தலைப்புகளில் முக்கியமான தலைப்பாக கருதும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

மாதவிடாய் நாளில் இருக்கும் ஒரு பெண்ணிடம், என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க என்று ஒரு ஆண் கேட்டால், இன்னும் உடம்பு சரியில்லை அல்லது தலை வலிக்கிறது என்கிற மறைமுக விளையாட்டையே நாம் ஆண்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் ஆண் ஆசிரியரிடமோ அல்லது ஆண் சக ஊழியர்களிடமோ ‘எனக்கு இன்னைக்கு Periods’- என்று தயங்காமல் சொல்லும் வெளிப்படைத்தன்மை பெண்களுக்கு வந்துவிட்டதாகத் தோன்றவில்லை.

அதைவிடக் கொடுமை, பள்ளிகளிலோ அல்லது அலுவலகங்களிலோ மாதவிடாய் நாள் தொடங்கிவிட்டால் அங்கிருக்கும் ஆண்கள் கண்களில் படாமல் அந்த நாப்கினை எப்படி டாய்லட்டிற்கு எடுத்துச் செல்வது என்று யோசித்தே சோர்ந்து போன அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு. அதை ஒரு கவர் அல்லது பேப்பரில் மடித்து, ஆடைக்குள் எங்காவது சொருகிக்கொண்டு, இயல்பாக நடந்து டாய்லட்டிற்கு செல்வதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது. இதில் யாரவது அதை கவனித்துவிட்டார்களா என்கிற சிறுபிள்ளைத்தனமான பயம் வேறு. ஏன் மாதவிடாய் குறித்த இத்தனை நடைமுறை சிக்கல்கள்?

இதற்கு ஒரு முக்கிய காரணம், நம் ஆண்களுக்கு இன்னும் மாதவிடாய் குறித்த புரிதல்  குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. இது பெண்களின் அந்தரங்கமான விசயம்; எனவே இதிலிருந்து சற்றே விலகியிருத்தல் சாலச் சிறந்தது என்றே ஆண்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு காய்ச்சல் வந்தாலோ அல்லது சளிப்பிடித்தாலோ அது அவர்களின் அந்தரங்கம் என்று நாம் விலகுவதில்லை. அதுபோலதான் மாதவிடாயும் என்கிற இயல்பான சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டியக் கட்டாயத்தில் ஆண்கள் இருக்கிறார்கள். அதுவே பெண்களுக்கு இதுப் பற்றிய வெளிப்படைத்தன்மையோடு இருப்பதிலும், உதவி கேட்பதிலும், இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை ஓரளவேனும் குறைக்கும்.

அதேபோல் பெண்களும், மாதவிடாயைக் குறித்த உரையாடல்களை இந்த சமூகத்தில் சகஜமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்படும் பொழுதுதான் இந்த நடைமுறைச் சிக்கல்கள் அகலும். இன்னும் நம் சமூகத்தில் அம்மாக்கள் தன் மகன்களிடம் இதுகுறித்து பேசுவதைத் தவிர்ப்பது என்பது மிகப்பெரிய அபத்தமாக இருக்கிறது. ஏனென்றால், ஆண்களின் இதுபோன்ற அடிப்படைக் கற்பிதங்கள் அவர்களின் அம்மாவிடமிருந்தும், வீட்டிலிருந்துமே தொடங்குகின்றன என்பது எனது கருத்து.

இந்த சமூகம் எவ்வாறு பார்க்கிறது? மாதவிடாயைப் பற்றி இந்த சமூகம் தெரிந்து வைத்திருக்கிறதா?...அப்படியே தெரிந்துவைத்திருந்தாலும் அது சரியானதாக இருக்கிறதா??...பார்க்கலாம்...

மாதவிடாயைப் பற்றி அறிவியலாக சொல்ல வேண்டுமென்றால் 'பெண்களின் அடிவயிற்றில் கருப்பைக்கு இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக சினைப்பைகள்(Ovary) இருக்கும்...சினைப்பையில்தான் பெண்கள் கருத்தரிப்பதற்கான கருமுட்டைகள் வளர்கின்றன...இந்தக் கருமுட்டை கருக்குழாய்(Fallopien tube) வழியாக கருப்பையை அடையும்...கருமுட்டை ஆணின் விந்தணுவோடு இணைந்தால் கரு உருவாகும்...அந்த கருமுட்டை ஆணின் விந்தணுவோடு சேரவில்லையென்றால் அது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும்...அங்கே இருக்கக்கூடிய பஞ்சு போன்ற மென்மையான திசுப்படலம் கரு உருவாகாதபோது உடைந்து இரத்தமாக வெளியேறும்...இந்த இரத்தப்போக்கு மாதம் ஒருமுறை 3-5 நாட்கள் வரை நடக்கும்...இதுதான் மாதவிடாய்....

படிப்பறிவில்லாத மக்களுக்கு இதனைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாரான பின்பு மாதாமாதம் நடக்கக்கூடிய இரத்தப்போக்குதான் மாதவிடாய்.

 மாதவிடாய் நடக்கும் முன்பு இருக்கக்கூடிய நிலை உளவியலாக மிகப்பெரிய சிக்கலைக் கொடுக்கும்...இதனை premenstrual syndrome என்பர்...மாதவிடாய் தோன்றுவதற்குமுன் கவலை,பதற்றம்,ஆர்வமின்மை,அசதி,கோபம்,எரிச்சல்,தூக்கமின்மை,பாதுகாப்பற்றதாக உணர்தல்,தனிமை விரும்புதல்,தான் அழகாக இல்லை என நினைக்கும் பெண்களுக்கும் சமூகத்தால் அங்கீகாரம் கிடைக்காத பெண்களுக்கும் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை,இந்த அனைத்திற்கும் உச்சமாக தற்கொலை எண்ணம் வரை இந்த premenstrual syndrome என்று சொல்லக்கூடிய மாதவிடாய்க்கு முந்தைய நிலையில் பெண்களுக்குத் தோன்றும்...பல நேரங்களில் இந்த எண்ணங்கள் மாதவிடாய் தொடங்கி முடியும்வரை இருக்கும்...சில சமயங்களில் பெண்கள் தேவையில்லாமல் அதிகளவு கோபப்படுவதற்கான காரணம் இதுதான்...

மாதவிடாய் சில பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மாதாமாதம் ஏற்படாமல் 2,3 மாதத்துக்கு ஒருமுறை 6 மாதத்துக்கு ஒருமுறை என ஏற்படும்...இதனை Irregular periods என்பர்...அவ்வாறு ஏற்படும்போது 6 மாதத்திற்கும் சேர்த்து இரத்தப்போக்கு ஒரே சமயத்தில் வெளியேறும்....இந்த இரத்தப்போக்கானது தொடர்ந்து 15,20 நாட்கள் வரை இருக்கும்...இவ்வாறு Irregular periodsஐ சந்திக்கும் பெண்களுக்கு தசைப்பிடிப்பு,மார்பக வலி,மார்பக வீக்கம்,தலைவலி,தோள்மூட்டு வலி,தண்டுவட வலி,மனச்சோர்வு,எரிச்சல,உடல் அசதி,அடிவயிற்றுவலி,வாந்தி,குமட்டல் போன்றவை சொல்ல முடியாத அளவு ஏற்படும்...

இன்று பலரும் பெண்களின் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி இன்றைக்கும் கண்டுகொள்வதே இல்லை.
எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக அணுகக் கற்றுக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தில், மாதவிடாய் தொடர்பான சிலக் கேலிக்கூத்துகளும் நடந்துகொண்டிருக்கின்றன என்பது மறுக்க பட முடியாத உண்மை. இனியேனும் இது பெண்கள் பிரச்சனை என்று ஒதுங்கி நிற்காமல் ஆறுதலாக இருக்க முயற்சிப்பது அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

Dark Side of Trending Penguin 🐧

 Dark Side of Trending Penguin 🐧  இன்றைக்கு சமூக வலைத்தளம் முழுவதும் பேச்சு பொருளாய் மாறி இருக்கு ஒரு பென்குயின்…70km தூரம் எதையும் யோசிக்க...