வனத்தில் உள்ள முட்கள் எல்லாம்
மனதில் ஆறாத ரணங்களாய் தைத்திடவே...
ஊமையாகிறாள் ஆகிறாள் முதிர்கன்னி....
பளபளக்கும் முத்தொன்று
சிற்பிக்குள் அடைபட்டு
அழும் கண்ணீரை அறிவார் உண்டோ....
வரதட்சணை அரக்கர்களே !
பெண்களின் வாழ்க்கையை
கடலுக்குள் முழ்கடிப்பது போல
வரதட்சனைகளுக்குள் முழ்கடிக்காதீர்....
பொருளென நினைத்தீரோ ?
பெண்ணின் மனதை...
திருமணச்சந்தையில்,
தன் மகளை விலையேற்ற,,,!
அடிமாட்டுச் சந்தையில்,
தான் வளர்த்த மாடுகளுக்கு
விலை வைத்துவிட்டார்...!!
தந்தை ஒருவர்....
ஒரு வயதிற்கு மேல் பெற்ற பெண்ணையே பிரச்சனை என்றார் இன்னொருவர்....
ஒரு பெண்ணை ஒப்பேற்றவே ஓடாய் தேய்ந்தேனே மற்றவர்களுக்கு... என உள்ளூர நொந்தார் வேறொருவர்.....
ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டிதான் என சும்மாவா சொன்னார்கள்....
ஒரு வேளை....
மகளைகளை பெற்றாலே குற்றமோ..... அதற்கான அபராதம்தான் இந்த வரதட்சனையோ....
பறவைகள்... ஏன் முதுகெலும்பு இல்லா புழுக்கள்கூட தனக்கான வீட்டை,பொருளை தானே தேடிக்கொள்கின்றன... நாம் இன்னும் மனிதன் என்று பீற்றிக்கொள்கிறோம்.... மனிதம் இல்லாமல்....
ஆணாணவன் தனக்கான வாழிடத்தை தானே அமைக்க கற்றுக்கொண்டானேயானால்- ஓர் ஆண் ஓர் வீட்டை மட்டுமே கட்ட கடமைப்பட்டவன் ஆகிறான்..... பல அப்பாவி அபலைகளின் கண்ணீர் துடைக்கும் கைகுட்டையாகிறான்.....
உடலுக்குள்
உயிர் ஒன்றே ஆணுக்கும்... பெண்ணிற்கும்...
உருவம் மாறி முதுமையெய்து உன் தாரத்தில் கோடி தாயை உணருவாய்.....
அப்போது......உன்-கண்கள் பனிக்கும்.....
உன்-கர்வம் கலையும் அந்த
கணங்களில்
காசு காற்றில்
கருகிய சாம்பலென உணர்ந்து வருந்தாதே மனிதா....
முதலில் மனிதம் பேசு
பின் காதல் பேசலாம்...
பெண்ணின் புத்திரனாய்
பெண்மை உணர்ந்திடு ...
நீயும் ஓர் நாள் தந்தையாவாய் மறந்துவிடாதே....
ஆணினமே.... உன்கோர் வேண்டுகோள்.....
வேரை விட்டு வெளியே வா
வரதட்சணைப் புற்றை உடைத்தெடு
முடிய கதவிற்கு பின்னே மூடாத கனவுகளுடன் இருக்கும் தேவதைகளை வாழ விடு-
உனக்காயினும் அவளிற்காயினும் முதுமை இருள் சூளுவதற்குள்...!
பஸீன் றிபாயா சமீம்
No comments:
Post a Comment